முந்தின வருசம்
பாண்டிப் பயலும்
பாத்திமாப் புள்ளையும்
ஊரைவிட்டே ஓடிப்போனார்கள்;
அதற்கும் முந்தின வருசம்
மாயனும் முனியனும்
வெட்டிக் கொண்டு
உலகை விட்டே ஓடிப்போனார்கள்;
இந்த வருசம் என்ன நிகழுமோ?
திகிலில்
உறைந்திருக்கிறார்கள்
ஊர் சனங்களும்
உலகாளும் அம்பிகையும்
அவளது பரிவாரங்களும்.
- ஸ்ரீதர்பாரதி