மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பேரம் பேசி தங்கள் கட்சி ஆதரவாளராக மாற்றி ஆட்சியை கவிழ்த்து வருகிறது பாஜக. இந்த கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சம் கொடுக்க பாஜகவுக்கு எங்கிருந்து பணம் வந்தது, பேரம் பேசுவதே லஞ்சம் தானே, பிஎம் கேர் என்ற ஒரு தனி அமைப்பை மோடி உருவாக்கி அதில் பல்லாயிரம் கோடி நன்கொடைகளாக குவித்து வருகிறார்கள், இதற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பெரும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளில் 90% பாரதிய ஜனதா கட்சி பறித்துக் கொள்கிறது. அமித் ஷா மகன் ஜெய் ஷா தொடங்கிய நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டு சொத்து மதிப்பு 75 லட்சம், இது 2023 இல் 140 கோடியாக உயர்ந்துள்ளது எப்படி? இது ஊழல் இல்லையா என்று கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதுவரை பதில் ஏதுமில்லை.

தமிழ்நாட்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள்

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளைப் பரப்புவதற்கே அண்ணாமலை ரத யாத்திரை புறப்படுகிறார் என்கிறார் அமித் ஷா. ஜெயலலிதா ஊழல் ஆட்சி நடத்தியவர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்தவர் தான் அண்ணாமலை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜகவில் இருந்து விலகுவேன் என்றெல்லாம் மிரட்டினார் அண்ணாமலை, அவரே இப்போது ஜெயலலிதா எம்ஜிஆர் கொள்கைகளை பரப்ப 234 தொகுதி வரைக்கும் யாத்திரை போகிறாராம்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

கிறிஸ்தவனையும் முஸ்லிமையும் நாம் தேவனின் பிள்ளைகளாக நினைத்துக் கொண்டிருந்தோம், அது சாத்தானின் பிள்ளைகளாகி பல வருடங்கள் ஆயிடுச்சு. இந்த நாட்டில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தான்.

- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் (30.07.2023)

சங்கிகள் கூட இப்படி வெளிப்படையாக பேசுவதில்லை, தமிழ் சங்கி சிறுபான்மை சமூகத்திற்கு மத அடையாளத்தை முதன்மைப்படுத்தி ஆர்எஸ்எஸ் குரலாகவே பேசுகிறார், நாம் தமிழர் என்ற பெயரை நாம் இந்து என்று மாற்றிக் கொண்டு அர்ஜுன் சம்பத்தோடு இணைந்தாலும் வியப்பில்லை.

விடுதலை இராசேந்திரன்

Pin It