உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் வாழ் நாளெல்லாம் உயர்ந்து நின்றார்.

karl_marx_450அவர் தனது காலத்தில் உலக நாடுகளில் சோஷலிஸ்ட்களுக்கு போதனை செய்த பேராசிரியர். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் உருவாகக் காரணமாய் இருந்தவர், உதவிகள் செய்தவர்.

ஆழமான கட்சி உணர்வு மிகுந்தவர். கொள்கைப் போராட்டத்தில் விட்டுக் கொடுக்காமல் போராடித் தன் கொள்கையை, தன் கருத் தை அழுத்தந்திருத்தமாக நிலைநாட்டியவர். இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குகளின் விதிகள் குறித்த விஞ்ஞானத் தை உருவாக்கியவர், வளர்த் தவர்.

அவரது நண்பர்களுக்கு இடையே தலைசிறந்த நண் பராகத் திகழ்ந்தவர் ஏங்கல்ஸ். காவியப் புகழ் படைத்த நட்பு இவர்களது நட்பாகும். மார் க்ஸ் - ஐ சந்தித்த பின்னர் அடுத்த நாற்பது ஆண்டு காலம், மார்க்ஸ் உயிர் துறக்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்து மார்க்ஸ்-ஐப் பாதுகாத்தவர். அது மட்டுமல்ல, மார்க்சின் மறைவுக்குப் பின்னர், மார்க்ஸ் எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற நூல்களை எழுதி முழுமைப்படுத்தியவர் ஏங்கல்ஸ்.

‘மூலதனம்’ என்னும் உலகப் புகழ்பெற்ற நூலின் இரு தொகுதிகளும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்னும் இரு மனிதர்களின் படைப் பாகும் என்றார் மாமேதை லெனின். இந்த மேதைகள் இருவரின் பெயர்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துவிட்டன என்பது உண்மையே.

மார்க்ஸ் நகைச்சுவை உணர்வு மிகுந் தவர். அவரது பேச்சிலும் எழுத்திலும் துள்ளிவரும் எள்ளல் சுவை கொஞ்சமல்ல. ‘அவரது எழுத்து நடை என்பது கிரேக்கர் கள் குறுவாளாகவும் எழுத்தாணியாகவும் பயன்படுத்திய ஆயுதம் போன்றது’ என அவரது ஆருயிர் நண்பர் லீப்னெஹ்ட் கூறியுள்ளார். மார்க்சின் விமர்சனங்கள் குறி தவறாமல் இதயத்தில் பாயக்கூடியவை.

மார்க்ஸ் இலக்கியப் பேராற்றல் மிக்க ஆசான். அவரது வாக்கியக் கட்ட மைப்புக்குள் பல இலக்கிய மேற்கோள்கள் இருப்பதைக் காணமுடியும். மாபெரும் ஜெர்மன் கவிஞர் ஹென்ரிச் ஹெய்னே-வை நேசித்தவர், ஷேக்ஸ்பியரை ரசித்தவர், கதே-வுடன் கைகுலுக்கியவர்.

குழந்தைகளுக்குப் பிரிய மான கிறிஸ்துமஸ் தாத்தா! அவர் வாரி வாரி வழங்கிய தெல்லாம் நகைச்சுவையும் நீதிநெறி விளக்கமும் கொண்ட கற்பனைக் கதைகளும் இதய பூர்வமான அன்பும்தான்.

காதலித்து மணந்தவர். மனித குலத்திலேயே மிகுந்த மனிதாபிமானம் மிக்கது காதல் என்றவர். ஜென்னியை மணக்க ஏழாண்டுக் காலம் காத்திருந்தவர். தனது காலத் தில் புரட்சிகரப் பத்திரிகை யாளராய்த் திகழ்ந்த அவரை வறுமையில் வாட்டி எடுத்தது முதலாளித்துவ உலகம்.

பிறந்த குழந்தைக்குப் பால் வாங்கக் காசில்லை; அதே குழந்தை இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் வழி இல்லை!

ஜென்னி இறந்தவுடன், தனது உயிராய் நேசித்த ஜென்னியை இழந்தவுடன் ‘மூர்’-ம் (மார்க்ஸ்) இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.

உலக மக்களுக்கு அன்பு மழை பொழிந்த மேகம்! சொந்தக் குழந்தைகளையும் பாட்டாளி வர்க்க லட்சி யத்திற்குப் பாடுபட வைத் தவர்!

அவர் 1818 மே - 5ஆம் நாள் மார்க்ஸ் பிறந்தார். அவரது தந்தை ஹென்ரிச் மார்க்ஸ். தாயார் ஹென்ரியேட்டா பிரஸ்பர்க். கார்ல் என்று பெயரிட்டார் அவரது தந்தை.

1835-இல் பதினேழு வய தான போது கார்ல் தன் பள்ளிப் படிப்பை முடித் தார். அந்த ஆண்டு அக் டோபரில் முதன்முதலாக டிரியர் நகரைவிட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொண்டார். பான் பல்கலைக் கழகத்தின் சட்டப் பிரிவில் இளம் மார்க்ஸ் சேர்ந்தார்.

லுத்விக்வான் வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடிப் பிரமுகர். அவரது குடும்பத்தினர் மார்க்ஸ் குடும்பத்தினருடன் நட்புறவு கொண்டிருந்தனர். அவரது மகள் ஜென்னி பிற்காலத்தில் இளம் மார்க்சின் துணைவியானார். ஹோமர், ஷேக்ஸ்பியர் எழுதிய படைப்புக்கள் யாவும் வெஸ்ட் பாலனுக்கு மனப்பாடம்! அவர் தன் இளைய மகன் எட்கார், மகள் ஜென்னி உடனிருக்க மார்க்சுக்கு மாபெரும் இலக்கியப் புதையல் களை அறிமுகப்படுத்தினார். மார்க்சின் கவிதை உணர்வுகளைத் தூண்டி வளர்த் தார். கற்பனாவாத சோஷலிஸ்ட்டான செயின்ட் சைமனை முதலில் மார்க்சுக்கு எடுத்துக் கூறினார்.

jenny_marx_522ஜென்னியின் அண்ணன் ஃபெர் டினாண்டு பிரஷ்ய அரசாங்கத்தில் உள் துறை அமைச்சர். அவர் தனது மைத் துனரான மார்க்சுக்கு முக்கிய அரசியல் எதிரியாக மாறியவர்.

மார்க்ஸ் 1839-இல் பெர்லின் பல் கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். மார்க்ஸ் - ஜென்னி காதல் நிறைவேற இன்னும் ஏழாண்டு கள் காத்திருக்க வேண் டிய தாயிற்று!

இளம் மார்க்ஸ் இடதுசாரிச் சிந்தனை யாளராய் மாறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு தந்தை யோ மிகுந்த கவலை அடைந்தார். 1839 மே மாதம் கார்லின் தந்தை மரணம் அடைந்தார். அப்பா வின் மீது அவருக்கு அளவு கடந்த நேசம். கார்ல் மார்க்ஸ் மரணம் அடையும் போது தன் சட்டைப் பை யில் தனது தந்தையின் நிழற் படத்தை வைத்திருந்தார். அந்த அளவுக்கு அப்பாவை நேசித்தவர்.

1840 ஆம் ஆண்டுகளில் தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னை யும் இணைத்துக் கொண் டார். இக்குழுவினர் மத்தி யில் கார்ல்-க்கு அதிக ஆதரவு கிட்டியது. இளம் ஹெகலிய வாதிகளும் மார்க்சும் மதத் தைக் கடுமையாக எதிர்த்தனர். கிறிஸ்துவ மதம் அறநெறி யற்றது. மனிதனுக்கு விரோத மான சக்திகள் மனிதனை ஆளுகின்ற, மனிதத் தன்மை யற்ற உலகத்தில் உண்டாக்கப் பட்டதே மதம் என்றார் இளம் மார்க்ஸ். 1859, ஏப்ரல் 15ல் ஜெனா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

“நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ். அவர் மிகவும் இளவயதுக் காரர். வயது 24 இருக்கும். அவர் மத்திய கால தத்துவ ஞானத்துக்கும் அரசியலுக் கும் இறுதி அடிகொடுப் பார். கூர்மையான நகைச் சுவை உணர்வை ஆழமான தத்துவச் செறிவுடன் இணைக் கிறார். ரூஸோ, வால்டேர், ஹோல்பர்க், லஸ்ஸிங், ஹெய்னே, தத்துவஞானி ஹெகல் ஆகிய எல்லோரும் இணைந்திருப்பதை - இணைத் திருப்பது என்றுதான் கூறு கிறேன், கலந்திருப்பதாகச் சொல்லவில்லை, கற்பனை செய்யுங்கள் அவர்தான் டாக்டர் மார்க்ஸ்” மார்க்ஸ் - ஐப் பற்றிய தன் கருத்தை மோசஸ் ஹேஸ் என்பவர், அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் துல்லியமாக முன் னறிந்து கூறினார். இந்த மோசஸ், இயேசுநாதர் வருகை யைப் போல கம்யூனிசப் புரட்சி வரப் போகிறது என்று முன்கூட்டியே சொன்னவர்.

தன் மகனைப் பணம் சம் பாதிக்க லாயக்கற்ற உதவாக் கரை என்று வசை பாடினார் கார்ல்-இன் தாய். தந்தையின் சொத்தில் பங்குதர மறுத் தார். ஜென்னியின் குடும்பத் தாருடனும் கருத்து வேறு பாடு கொண்டிருந்தார். கை யில் பணம் இல்லாத நிலை யில் ஜென்னி - மார்க்ஸ் திருமணம் அடுத்த இரண் டாண்டுகளுக்கு கேள்விக் குறி ஆனது.

1842 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்ட ரைய்னிஷ்ச் ஜுய்டங் என்னும் அரசியல் இதழில் சேர்ந்து ஆசிரியர் பொறுப்பேற்றார். அவர் ஆசிரியரான பின்னர் பத் திரிகை வளர்ச்சி அடைந் தது பிரஷ்ய அரசை எதிர்க்க மார்க்ஸ்-இன் கையில் பத் திரிகை ஓர் ஆயுதம் ஆனது. 1843 மார்ச்சில் பத்திரிகை தடை செய்யப்பட்டது. பின் னர் புரட்சிகரப் பணியில் ஈடுபட பாரிஸ் சென்றார். மார்க்ஸ் முன்னதாக ஜென்னி யைச் சந்தித்தார்.

1843ஜூன் 12 அன்று கிரியுஸ்நாக் என்ற ஊரில் திருமணம் நடைபெற்றது. திருமண ஒப்பந்தச் சான்றிதழ் அளிக்கப்பட்ட போது, அவர் களுக்கு எவ்விதத் தொழி லும் இல்லை என்பதும் அதில் குறிப்பிட்டிருந்தது.

1843 அக்டோபரில் பாரீசில் குடியேறிய பின்னர் கடும் அரசியல் பணி மேற் கொண்டனர். அங்கிருந்த நீதியாளர்கள் கழகத்தில் சேர்ந்தார் மார்க்ஸ். ஜெர் மனியின் மாபெரும் கவிஞர் ஹெய்னே அடிக்கடி மார்க் சின் இல்லம் வந்தார். கருத் துக்களைப் பகிர்ந்து கொண் டார். ஜெர்மனியை விடு விக்கும் சக்தி தோன்றும் என்று தன் கவிதை களில் முழங்கினார் ஹெய்னே. மார்க்சின் சிந்தனைத் தாக்கம் அவரது கவிதை களில் வெளிப் பட்டது.

1844-இல் பிரெஞ்சு - ஜெர்மன் பத்திரிகை தொடங்கப் பட்டது. மார்க்ஸ் அதன் ஆசிரியர். “தத் துவமானது மக்களின் மனத்தைப் பற்றிய உடனேயே அது பொருள் வகை சக்தி யாகிறது” என்றும் ஒரு சோஷலிசப் புரட்சியைச் சாதிக் கும் சமூக சக்தி பாட் டாளி வர்க்கம்” என் றும், “எல்லாவித மான சமூக அரசியல் ஒடுக்குமுறையிலிருந் தும் மனித குலத்தை விடுவிப்பதே சோஷ லிசப் புரட்சியின் கண்ணோட்டம்” என்றும் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

அவரது எழுத்துக்களைக் கண்டு மிரண்டது அரசு. அவரைக் கைது செய்ய பிரஷ்ய அரசு உத்தரவிட்டது. 1844-இல் சைலிஷிய நெசவாளர்களின் மாபெரும் எழுச்சியை ஆதரித்து பாரீசில் இருந்தபடி கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். பிரஞ்சு மற்றும் பிரஷ்ய அரசுகள் ஆத்திரமடைந்தன. 24 மணி நேரத்திற்குள் பிரான்ஸ் - ஐ விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

மார்க்ஸ் தம்பதியினர் பிரசல்ஸ் (பெல்ஜியம்) நகரில் குடியேறினர். வேண்டா வெறுப்பாக அவரை ஏற்றுக் கொண்ட பெல்ஜிய அரசு, ஒரு பத்திரிகையாளராக அவர் வாழ முடியாதபடி தொல்லை கொடுத்தது. மார்க்ஸ் குடும்பம் வறுமை யில் வாடியது. நண்பர்கள் காப்பாற்றினர். ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்று தான் எழுதிய நூலுக்கு கிடைத்த முதலாவது ராயல்டியை மார்க்சுக்கு அனுப்பினார் ஏங்கல்ஸ்.

மார்க்சும் - ஏங்கல்சும் 1842 ஆம் ஆண்டில் கொலோன் நகரில் முதன் முதலாகச் சந்தித்துக் கொண் டனர். அப்போது ரைய்னிஷ்ச் ஜூய்டங் இதழின் ஆசிரிய ராக இருந்தார் மார்க்ஸ். 1844-இல் மார்க்ஸ்-ஐ மீண்டும் சந்தித்த ஏங்கல்ஸ் பத்து நாட்கள் அவருடன் பல்வேறு தத்துவஞான கருத்துக்களை விவாதித்தார். இரு வருக்கும் இடையில் ஒரு தெளிவான கருத்தொற்றுமை இருப் பதை இருவருமே புரிந்து கொண்டனர்.

1845-இல் ஏங்கல்சுடன் இங்கிலாந்து சென்றார் மார்க்ஸ். மான்செஸ்டர் நூலகம் சென்று இருவரும் ஆராய்ச்சியில் இறங்கினர்.

1846 டிசம்பரில் மார்க் சுக்கு மகன் பிறந்தான். எட் கார் எனப் பெயரிடப்பட்டது. ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதன் முதலாகச் சேர்ந்து எழுதிய நூல் ‘புனிதக் குடும்பம்’. பின்னர் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலை எழுதி முடித் தாலும் அவர்களது வாழ் நாளில் அதை வெளியிட முடியவில்லை. அது 1932-இல் சோவியத் யூனியனில் முதன் முதலாக வெளியிடப் பட்டது.

1846 பிப்ரவரியில் பிர சல்ஸ் கம்யூனிஸ்ட் கடிதப் போக்குவரத்து கமிட்டியை உருவாக்கினர். பல நாடு களில் கிளைகள் அமைக்கப் பட்டன. புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் கடிதம் மூலம் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் - ஐத் தெளிவு கொண்டனர்.

நீதியாளர் கழகத்தில் 1847-இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் பொறுப்பேற்றதும் அது கம்யூனிஸ்ட் கழகம் ஆனது.

கம்யூனிசப் போராட்ட லட்சியத்தின் மீது மார்க்சுக்கு மிக ஆழமான ஈடுபாடு இருந்தது. பாட்டாளிகளின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றிய விரிவான ஞானமும் அவருக்கு இருந்தது. உழைக் கும் மக்களை அவர் நேசித் தார். உழைக்கும் மக்களும் அவரை நேசித்தனர். அவர் கள் தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் வகையில் இளை ஞர் மார்க்ஸ்-ஐ ‘தந்தை மார் க்ஸ்’ என்று அழைத்தனர்.

1847 இறுதியில் கம் யூனிஸ்ட் கழகத்தின் இரண் டாவது மாநாடு லண்டனில் கூடியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதுவதில் மார்க்சும் ஏங்கல்சும் ஈடு பட்டனர். 1848ல் இருவரும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை லண்டனில் வெளி யிடப்பட்டது. பாரீசில் 1848 பிப்ரவரியில் ஏற்பட்ட புரட்சியை மார்க்ஸ் வரவேற்றார். இதன் தர்க்கம் ஜெர்மனை விட்டு வந்து பிரசல்ஸ்ஸில் குடியேறியவர்களிடமும் ஏற்பட்டது. வறுமை இருந்த போதிலும் புரட்சிக்காரர்களின் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு மார்க்சும் - ஜென்னியும் உதவினர். ஐரோப்பா முழுவதும் போராட்டச் சூழல்கள் உருவாயின.

புரட்சியின் மையமான பாரீஸ் செல்ல விரும்பினார் மார்க்ஸ். அங்கிருந்த இடைக் கால அரசு அனுமதித்தது. ஆனால் அதற்குள் பெல்ஜிய அரசு அவரைக் கைது செய்து பிரசல்ஸ் சிறைக்கு அனுப்பியது. பின்னர் போலீஸ் பட்டாளம் ஜென்னியை அழைத்துச் சென்று, இழிவுபடுத்தி, நீதிமன்றத்தில் நிறுத்தியது.

பொதுமக்கள் ஆவேசப்பட்டனர். இதன் விளைவாக மார்க்சும் ஜென்னியும் விடுதலை செய்யப்பட்டனர். விஷயம் பத்திரிகைகளில் வெளியானது, நாடாளு மன்றத்தில் விவாதம் வந்தது. அதிகாரிகள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். மார்க்ஸ் 1848 மார்ச் 5-இல் பாரீஸ் வந்து சேர்ந்தார். பாரீஸ் புரட்சி நசுக்கப்பட்ட தும் லண்டனில் குடியேறினார். மார்க்சும் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை யில் 33 ஆண்டுகள் இங் கிலாந்தில் குடியிருந்தார்.

1850-இல் மார்க்சின் ஒரு வயது மகன் காய்ச்சலில் இறந்தான். 1851-இல் மகள் பிரான்சிங்கா இறந்தார். அவள் பிறந்த போது பால் வாங்கவும் காசில்லை. இறந்த போது சவப்பெட்டிக்கும் வழியில்லை. அவ்வளவு வறுமை! ஒரு பிரெஞ்சுக் காரர் சவப்பெட்டி வாங்கித் தந்தார். 1855-இல் எட்டு வயது மகன் எட்கார் இறந்தான்.

மார்க்சின் மூத்த மகள்களான ஜென்னியும் லாராவும் திறமைசாலிகளாய் விளங்கினர். ஆங்கிலம், பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்திருந்தார்கள். ஜென்னி ஓவியம் வரைந்தாள். லாராவுக்கு இசையில் ஈடுபாடு அதிகம். உலக இலக்கியங்கள் மார்க்ஸ் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமாய் இருந்தன.

நியூயார்க் டெய்லி டிரிப்யூன் இதழில் நிறைய எழுதினார் மார்க்ஸ். 10 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருந்தார். 1853-இல் நேரடியாக ஆங்கிலத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தார்.

1855 ஜூலை 1-ஆந் தேதி லண்டனில் நடைபெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் போது அவர்களுக்கு மத்தியில் மார்க்சும் அவரது ஆருயிர் நண்பர் லிப்னெஹ்ட்டும் இருந்தனர். போலீசாரிடம் கைதாகாமல் தப்பினர். அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியினால் பத்திரிகை மூலம் கிடைத்து வந்த வருவாய் குறைந்தது.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரஹாம் லிங்கனை ஆதரித்து எழுதினார் மார்க்ஸ். லிங்கன் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பது முன்கூட்டியே எழுதினார்.

jenny_marx_4501860 நவம்பரில் ஜென்னி உடல்நலம் இழந்தார். டிசம்பரில் குணமானதும் மார்க்ஸ் நோயில் விழுந்தார். 1861-இல் தன் தாயைச் சந்தித்தார் கார்ல். தன் மகன் மூலதனம் பற்றி எழுதுவதைவிட சிறிது மூலதனம் சேகரிக்க முயற்சி செய்திருந் தால் நன்றாக இருக்கும் என்று அவரது தாய் அடிக்கடி கூறுவார். அது கடைசி சந்திப்பு; 2ஙூ ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தாய் மரணம் அடைந்தார்.

மார்க்ஸ் மிக மென்மையான உள்ளம் கொண்டவர். கஷ்டங்களை சந்தித்து சந்தித்து மனம் நைந்து போனார். 1862-இல் அவர் ஏங்கல்சுக்கு எழுதிய கடிதத்தில் நானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள். நான் அவளைக் குறைகூற முடியாது. இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமரியாதை களும் கடும் துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

1861-இல் பொருளாதார ஆராய்ச்சியை மார்க்ஸ் தொடர்ந்தார். வருவாய் தேடி அலையும் அவலம் நீடித்தது. எனவே 1863-இல் ரயில்வே கிளார்க் வேலைக்கு மனு செய்தார். கையெழுத்து சரியில்லை என்று கிளார்க் வேலையும் மறுக்கப்பட்டது.

1864-இல் கம்யூனிஸ்ட் அகிலம் தோற்றுவிக்கப் பட்டது. மார்க்ஸ் இதன் உள்ளமாகவும் உயிராகவும் இருந்தார் என்று பிற் காலத்தில் லெனின் குறிப் பிட்டார். இந்த அமைப்பு உலகத் தொழிலாளி வர்க்கத் தின் சர்வதேச அமைப்பாகும்.

மார்க்ஸ் 1874-இல் ஈரல் நோயால் பெரிதும் அவதிப் பட்டார். மகள் எலியனாரு டன் சென்று மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டார். காரல்ஸ்பாத்திலிருந்து திரும்பி வரும் வழியில் டிரஸ் டன், பெர்லின், லைப்சிக், ஷாம்பெர்க் ஆகிய இடங் களில் தங்கி ஜனநாயகத் தலைவர்களான வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் ஆகஸ்ட் கீப், கியோடர்யோர்ஸ்ன் மற்றும் நூல் வெளியீட்டாளர் ஓட் டோமெஸ்னர் ஆகியோரைச் சந்தித்தார். 1875-இல் ஓப்பன் ஹீம் இல்லத்தில் தங்கினார். 1876 செப்டெம்பரில் மகள் எலியனாருடன் பிராக் நகரில் இருந்த ஓப்பன் ஹீம் இல்லத் திற்கு மறுபடியும் சென்றார். அப்போது பின் ஜென், கிரி யுஸ்ஷாக் ஆகிய ஊர்களுக் கும் சென்றார். 33 வருடங் களுக்கு முன் அவரும் ஜென்னியும் சில மாதங்கள் அங்கிருந்ததை மகளுக்கு எடுத்துக் கூறினார். மார்க்ஸ் லண்டன் திரும்பும்முன் யுடினைச் சந்தித்தார். அவர் அகிலத்தின் ரஷ்யப் பிரிவின் முன்னாள் தலைவர்.

மார்க்சின் உடல்நிலை இப்போது நன்கு தேறி இருந்தது. மார்க்சின் இரண் டாவது மகள் லாராவிற்கும் பால் லபார்க்கிற்கும் 1868 ஏப்ரல் 2-இல் திருமணம் நடந் தது. லபார்க் பிரான்சில் தலைசிறந்த மார்க்சிய வாதி யாய்ப் பரப்புரை செய்து வந்தார்.

1869-இல் லாராவுக்கு மார்க்சின் முதல் பேரன் பிறந்தான். 1872-இல் மூத்த மகன் ஜென்னிக்கும் சார் லஸ் லாங்கேவுக்கும் திரு மணம் நடந்தது. லாங்கே கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

மார்க்ஸ் தன் பேரப் பிள்ளைகளை நேசித்தார். மகள் லாராவின் மூன்று சிறிய குழந்தைகளும் ஜென்னியின் குழந்தையும் மரணம் அடைந்த போது பெரிதும் மனம் கலங்கினார் மார்க்ஸ்.

1871-இல் பாரீஸ் கம்யூனைப் பிரகடனம் செய் தது பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம். அந்தப் புரட்சிகர ஆட்சி 72 நாட்கள் நீடித் தது. கம்யூனுக்கு ஆதரவாக இயக்கம் நடத்தினார் மார்க்ஸ். ‘பிரான்சில் உள்நாட்டுப் போர்’ என்ற நூலையும் இந்தக் கால கட்டத்தில் எழுதினார்.

1848-இல் புரட்சி நடந்த போது ‘அகிலம்’ என்ற அமைப்பு இல்லை.

1871-இல் பாரீஸ் கம்யூன் புரட்சி நடந்தபோது ‘அகிலம்’ இருந்தது.

பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு இனியும் அகிலம் நீடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை இல்லை என்றார் மார்க்ஸ்.

இந்த அகிலத்தின் மூலம் சோஷலிசத்திற்கான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச அளவிலான போராட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

1870களில் பல நாடுகளில் தொழி லாளர் கட்சிகள் தோன்றின. இயக்கம், பொருளாதார, அரசியல் வளர்ச்சி, வரலாறு, பண்பாடு பற்றி ஆராய்ந்தார்.

1867 செப்டெம்பர் 14-இல் மூலதனத்தின் முதல் பாகம் ஹாம்பெர்க் நகரத்தில் வெளி யாயிற்று. அது மார்க்சியம் பரவுவதன் புதிய கட்டத்தைக் குறித்தது.

1872-இல் ரஷ்யாவில் (பீட்டர்ஸ்பர்க்) மூலதனம் ரஷ்ய மொழியில் வெளியிடப் பட்டது. மார்க்சின் மூலதனம் அவரது 40 ஆண்டு கால உழைப்பு ஆகும். அடுத்த இரண்டு பகுதிகளைப் படித்து, திருத்தி, எழுதி, சரி செய் தார் ஏங்கல்ஸ். இந்த விலை மதிக்க முடியாத பணியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த லெனின், ‘மூலதனத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை வெளியிடுவதன் மூலம் ஏங்கல்ஸ் தன் நண்ப ராகிய மாமேதைக்கு ஒரு கம்பீரமாக நினைவுச் சின்னத் தை எழுப்பி விட்டார். அதன் மூலம் அந்த நினைவுச் சின்னத் தின் மீது தன்னை அறியா மலேயே தனது பெயரையும் அழிக்க முடியாத வகையில் பொறித்துவிட்டார். உண் மையில் இவை மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பாகும்’ என்று எழுதினார் லெனின். 4 பாகங்களைக் கொண்ட மூலதனம் 1954-61-இல் சோவியத் யூனியன் வெளியிடப்பட்டது.

1881ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆந் தேதி ஜென்னி மார்க்ஸ் மரணம் அடைந்தார்.

பின்னர் மார்க்சும் கடும் நோய்வாய்ப்பட்டார். மார்புச் சளி பெரும் தொல்லை கொடுத்தது. வைட் தீவுக்கு சிகிச்சைக்காகத் தன் மகள் எலியனாருடன் சென்றார். மார்க்ஸ் நோயின் தொல்லைக்கு மத்தியிலும் தனது பொருளாதார ஆராய்ச்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். 1883 ஜனவரி 13-இல் மூத்த மகள் ஜென்னி மரணம் அடைந்தார். மூத்த மகளுக்கு 5 குழந்தைகள். அவள் இறந்த போது வயது 38. மிகவும் மனம் தளர்ந்து லண்டன் திரும்பினார்.

1883-இல் மார்க்சின் சுவாசப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மார்க்ஸ் மெல்ல செத்துக் கொண்டிருந்தார். 1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம் போல ஏங்கல்ஸ் வந்த போது எல்லோரும் வீட்டில் கதறிக் கொண்டிருந்தனர். அமைதியாக எவ்வித வேதனையும் இல்லாமல் மார்க்சின் உடல் பிரிந்துவிட்டது.

உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் லண்டன் விரைந்து வந்தனர். 1883 மார்ச் 17 லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜென்னி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது உடலும் புதைக்கப்பட்டது.

கண்ணீர் மல்க ஏங்கல்ஸ் இரங்கல் உரையாற்றினார்.

“யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத் தை வென்ற தத்துவமாகிவிட்டது!

(உங்கள் நூலகம் மே 2012 இதழில் வெளியானது)

Pin It