காபி, டீ அதிகமாக குடிக்காதவர்களை விட குடித்தவர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு வரும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு மேல் (சுமார் 600 மி.லி) காபி, டீ அருந்தினால் மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அதிகரிக்கிறதாம். அதாவது காபி, டீ குடிப்பவர்கள் அதிக மன உளைச்சல் உள்ளவர்களாக இருப்பதாலும், அதிக புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதால் மாரடைப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதே நேரத்தில் பால் கலக்காத தேநீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டீ குடிப்பவர்களுக்கு நன்மை செய்யும் எச்.டி.எல் கொலஸ்டிரால் அதிகமாவதாலும், கொலஸ்டிரால் ஆக்ஸிகரணமாகாமல் தடுக்கு ப்ளேவனாய்ட்ஸ் பொருட்கள் இருப்பதாலும் மாரடைப்பு நோய் பாதிப்பதில்லை எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்புடைய படைப்புகள்
காபி, டீ குடித்தால் மாரடைப்பு வருமா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது மருத்துவம்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.