கள்ளத் தனம்மிகுந்தோன் - கொடுங்
கவுடில்ய னுக்கிவன் முன்பிறந்தோன்!
சொல்இன நலம்உரைக்கும் - கறுஞ்
சிந்தையில் தன்னலம் பாய்விரிக்கும் !
எண்ணிய முடிப்பதிலும் - போட்டிக்கு
இருப்பவர் எவரையும் துடைப்பதிலும்
நுண்ணிய கலைஞனிவன்!- காய்
நகர்த்தலில் நிகரிலா மன்னனிவன்!
உறவுக்குக் 'கை'கொடுத்தான்! - இன
உரிமைக்குக் கல்லறை பல சமைத்தான் !
வருபுனல் காவிரியை - இவன்
வற்றவைத் தான்மிகு தன்னலத்தால்!
பகையுடன் கொஞ்சிவந்தான்! - கெஞ்சிப்
பல்லிளித்து உரிமைகள் அடகுவைத்தான்!
மிகப்பெரும் வினைத்திறத்தால் - தன்
மனைஉயர் வொன்;றையே நிதம்நினைத்தான்!
தமிழினைத் தமிழினத்தை - நெஞ்சில்
தாளாப் பகையாய்ச் சுமப்பவரை
உவந்து வளர்த்துவிட்டான்! - இன
உயிர்ப்பகைக்கு ஊக்கம் உரம்அளித்தான்!
குடிநலம் புரிவனென்றான்! - மதுக்
குடியராய்த் தமிழரைக் கெடுத்துஉயர்ந்தான்!
விடிவிலாத் துயரினர்முன் - இவன்
வீசினான் 'இலவசம்"! அவர்புதைந்தார்!
ஆற்றை அடகுவைத்தான் ! - மண்ணை
அயலவர்க்கு இங்கே பகிர்ந்தளித்தான்!
சோற்றுக்(கு) இலாதவர்க்கே வண்ணத்
தொலைக்காட்சி குடிக்காசால் உவந்தளித்தான்!
முன்னவர் சொந்தநிலம் - எங்கள்
மீனவர் தென்கச்சத் தீ(வு)அதனை
“அன்னை” கொடை கொடுத்தாள்! - வீரன்
அடங்கி ஒடுங்கி முடங்கி விட்டான்!
மணற்கொள்ளைத் திருடர்களால் - வன
மரங்களைக் கடத்திடு;ம் கயவர்களால்
பணம்பண்ணிக் கும்பல்களால் - ஆன
பண்புசால் தானையின் தலைவனிவன்!
தமிழ்எங்கும் எதிலும்என்றான்! கல்வி
தமிழ்தா என்கையில் திரும்பிநின்றான்!
தமிழிலா தமிழர் மண்ணில் - இவன்
தாராள மயங்களை இறக்கிவைத்தான்!
ஆங்கிலக் கொள்ளையர்க்கே -- இங்கு
ஆவன யாவையும் உடன்புரிந்தான்!
பாங்குறு தாய்த்தமிழ்சொல் - பள்ளி
பார்க்கவும் ஊக்கவும் நினைவிழந்தான் !
நெஞ்சம் கலங்கவில்லை! - மக்கள்
நூறா யிரர்மாண்ட(து) உறுத்தவில்லை!
கொஞ்சி மகிழ்ந்திருந்தான் !-டெல்லிக்
கொலைகாரர் உறவிலே திளைத்திருந்தான்!
ஈழம் எரிகையிலே - மக்கள்
உள்ளங்கள் வெதும்பித் துடிக்கையிலே
ஆளப் பிறந்தமகன் - ஆட்சிக்(கு)
ஆகத் திரிந்தனன் டெல்லியிலே!
தமிழைத் தமிழ்நிலத்தில் - ஆட்சித்
தகுமொழி ஆக்கி நலம்புரியான்
இமயம் குமரியிடை - நடு
ஆள்மொழி கோரிப் பிதற்றுகின்றான்!
ஆக்கச் செயல்விழையான்! - நாளும்
ஆரவா ரக்கூத்தை மறந்தறியான்
மாக்கொலை நினைவழித்தல் - வேண்டி
மாநாடு போட்டுக் கலக்குகிறான்!
போலிக்(கு) இலக்கணமாய்- பல
பொய்கள் பரப்பும் இருள்திரையாய்
வாழ்ந்து நிறைந்துவிட்டான் - வர
லாறுசீர் செய்வார் கடன்பெரிதே!
உள்ளங்கள் வெதும்பித் துடிக்கையிலே
ஆளப் பிறந்தமகன் - ஆட்சிக்(கு)
ஆகத் திரிந்தனன் டெல்லியிலே!// உண்மைதான்.... போலித்தமிழ்த்தல ைவன் கலைஞனா தமிழினக்கொலைஞனா ...
kavithaiyin iruthiyil saerthu kolla sila varigal...
ithanai seithidinum - kutram
ivan mael illai endre solvaen!
pitharai pOl vaazhum tamizhar
perilthaan en attanai varuthangalum!
kasadargalai tamizhar - thalayil
thooki vaithaadiyathan vilaivu!
asadargalai iniyum - illaadhu
ara neri kaathiduvOm!
anbu, unmai, saalbu - ivai
udaiyavar thamai naam mathipOm!
panbilaa pathagalaii naam - pala
persolli thuthithadu pOdumappa!
RSS feed for comments to this post