சொல்வதைச்
சொல்லும் கிளி என்றதும்
எல்லோரும்
ஏதேதோ கூற
அதுவும்
திருப்பிக் கூறிக்கொண்டிருந்தது
பைத்தியமாய்...

என் திருப்பம் வர 
அருகில் சென்றேன்
சக்கரநாற்காலியை நகர்த்திக்கொண்டே...
அழுகை வர
கிளியும்
அழ ஆரம்பித்திருந்தது!!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Pin It