முள்  குத்தி  அழுத மகளை
தேற்ற வழியன்றி
திணறும் வேளையில்..
அவள் வலி மறந்து
அவள் பார்த்து அழுதுகொண்டிருந்ததோ ...
செவ்வனே சாய்த்துவைத்து
செதில் செதிலாய் நகம்பெயர்த்து
லாவகமாய் அவனொருவன்
அடித்து அடித்திறக்கிய
லாடமேறும் காளை மாட்டை!
இவ்வளவு நாட்கள்
உணர்ந்திராத ஒரு வலியில் ..
நானும் அழ ஆரம்பித்திருந்தேன் அவளுடன்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.