மனம் கொத்த கற்றுக்கொண்டுவிட்டாய்
எழுத்தைவிடவும் உனக்கு
இயல்பாய் வருவது அதுதான் மல்லிகை மணம் பூசிய
மடிப்புக் கலையாத உடையிலிருந்து
துவங்குகிறாய்
மற்றவருக்கு நீ தரும் மரியாதையை
ஆழு உழுது மனசின் அடியாழத்தில்
உன் நட்பை விதைத்தவனை
விதண்டாவாதி என்கிறாய்
நல்லமழையில் நனைந்தோ
வீசும் காற்றில் கிழிந்தோ
சுயம் இழக்கக்கூடும் பகட்டாடைகள்
உணர்வாய்...
அவிழ்த்துப் போட்டவுடன்
எல்லா அம்மணமும்
அறுவருப்பானதே
-குரு.முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நீட் எதிர்ப்பு - புதிய பரிமாணம்!
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- இயக்கப் பணி; நம், எழுச்சிப் பணி
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- வெற்றிலை
- என் தமிழ்மொழியே! (இயற் கும்மி)
- கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
- கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 29, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- விவரங்கள்
- குரு.முருகன்
- பிரிவு: கவிதைகள்
வாழ்த்துக்கள்.
RSS feed for comments to this post