மனம் கொத்த கற்றுக்கொண்டுவிட்டாய்
எழுத்தைவிடவும் உனக்கு
இயல்பாய் வருவது அதுதான்
gurumurugan_009மல்லிகை மணம் பூசிய
மடிப்புக் கலையாத உடையிலிருந்து
துவங்குகிறாய்
மற்றவருக்கு நீ தரும் மரியாதையை
ஆழு உழுது மனசின் அடியாழத்தில்
உன் நட்பை விதைத்தவனை
விதண்டாவாதி என்கிறாய்
நல்லமழையில் நனைந்தோ
வீசும் காற்றில் கிழிந்தோ
சுயம் இழக்கக்கூடும் பகட்டாடைகள்
உணர்வாய்...
அவிழ்த்துப் போட்டவுடன்
எல்லா அம்மணமும்
அறுவருப்பானதே

-குரு.முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It