Laborஎன் விருப்பதை அலைக்கழித்து
வெகு நாட்களுக்குப் பின்
தர இசைந்தாய்

எனக்கு அறிமுகமாவதன் மூலம்
பிறருக்கு அம்பலமாகிவிடும்
அபாயம் குறித்து அஞ்சினாய்

காற்று நாமும்
தனித்திருக்கும் நேரத்தில்
சுற்றும் முற்றும் பார்த்து
கை திணித்துப் பறந்தாய்

அதன்பின்
உன் தொகுப்புக்கும் உனக்கும்
யாதொரு சம்பந்தமும்
இல்லாதவனாகவே
நடந்துகொண்டாய்

பாராட்டை விலக்கும்
முதல் கலைஞனாக
உன்னை தரிசித்தேன்

ஒரு மழை நேரத்து
ஆசுவாசத்தின்போதுதான்
உன் விசும்பல்

‘கடைநிலை ஊழியனுக்குக்
கவிதை ஒரு கேடா’

அன்றைக்குத்
தேநீரை விடவும்
அதிகம் சுட்டது
உன் வார்த்தைகள்தான்


மாறன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.