கைசிவக்க
மருதாணி தேடாதே
தொட்டு வைத்துக்கொள்
உன்வெட்கத்தை
.

வேரிலும்
பூக்கள் பூக்கும்
மரத்தடியில் நீ
.

தெரு முழுக்க
ஓடும்
நானெழுதிய முத்தம்
மழையில் நனைகிறாய்
.

தாகம் தணிய
முத்தமிடுகிறது
உன் உதடுகளில்
ஸ்டிரா
.

சிரிக்கும்போதெல்லாம்
தடுக்கி விழுகிறேன்
உன்
கன்னக்குழியில்


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.