ஓய்வு நேரமொன்றில்
கை எடுத்து பிரிக்கிற
புத்தகத்தின் பக்கங்களை மேயாமல்
கண்
இமைகளினுள் பதுங்கி மறையும்.
எழுத்துகளாலான தாள்களை
அறிவாக்கிட
முயன்று
முயன்று தோற்றயர்ந்த மூளை
களைத்துறங்கும்.
பாவம்
புத்தகமொன்றை சுமந்தபடி
கை!
- இ.இசாக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)