குழந்தைகளிடம்
சொற்கள் உருபெறும் தருணம்
அவர்களின்
உலகம்
அர்த்தமிழக்கத்
தொடங்குகிறது


பெருநகர அடுக்ககங்களின்
வாடகை
குடியிருப்புகளில்
வளர நேர்ந்த
குழந்தைகளின்
உலகத்தில்
பெற்றோர்
பூச்சாண்டிகள்

தடுப்பார் யாருமற்ற
திறந்தவெளியில்
சுற்றித்திரிவதைவிட
சுகம்
வேறெதுவும் உண்டோ?
குழந்தைகளுக்கு

 

Pin It