Peopleதாங்கும் அன்பிற்கும்
ஏங்கும் அன்பிற்கும்
வித்தியாசம் தெரியவில்லை.

எல்லோராலும்
உணரப்பட்டும்,
அலட்சிப்படுத்தப்படுகிறது
உண்மை.

ஊனமாகிப் போனவர்களின்
வாழ்வு வாழ்கிறோம்
நாம்.

செயல் திறனற்ற
உறுப்புகளைக் கொண்டு
தனக்குத் தானே
சுமையாகிப் போன சோகம்
நிகழ வேண்டாம் யாருக்கும்...

பிரியங்களை உதாசீனப்படுத்திவிட்டு
கருணைக்காக கையேந்துகிறோம்

எந்த திசையில் நின்றாலும்
அவரவர்க்கு
அவரவர் வானம்
அவரவர் காற்று.

அ. லட்சுமிகாந்தன்

More articles by அ.லட்சுமிகாந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.