Nightஅவிழ்ந்த கதைச் சுருளாய்
நழுவிப் பிரிகிறது இரவு மனம்
வானும் மண்னும்
உதடுகளாய்ச் சமைந்த
விசும்பின் வாயிலிருந்து உதிர்கின்றன
நட்சத்திர அட்சரங்கள்
கருந்தாள் பரப்பில்
எரிநட்சத்திரங்கள்
சித்திரங்கள் தீற்றுகின்றன
விடிய விடிய ஆடும்
நெடிய கூத்தின் கதையை
கூவிக் கதைக்கிறது இருட்டு

அழகிய பெரியவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.