பெரும்பிரலளயம் என்னுள்
More articles by ஒட்டக்கூத்தன்
நாளைக்கான பிம்பங்கள்
விடாமல் துரத்துகின்றன
வெகுதூரம் வந்துவிட்டேன்
கடப்பதற்கான பாதைகள்
அத்தனையும் ஒவ்வொன்றாய்
சிதைத்துக்கொண்டு
சிதைவுகளையும் சேர்ந்தே
சுமந்துகொண்டு எனக்கான
ஆணியை ஏந்தியபடி
சிலுவையில் ஏறி
பெருங்குரலேடுத்து கத்துகிறேன்
எனது செவிச்சிறைக்குள்
இத்தனை நாள் புகாத அத்தனை
குரல்களும் அந்தப்பெருங்குரலில்
மோதித்தெறிக்கின்றன…
வெறுமை நிறைந்த அந்த வெளியில்
எனது ஒற்றைக்குரல் மட்டும்
காற்றின் போக்கை மறுதலித்து
ஓங்கி அழைக்கிறது என்னை
சிலுவையில் அறையப்போகிறவனை
- ஒட்டக்கூத்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )