எனது தெருவிலேயே
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது முகவரியை...
எப்படித் தொலைத்திருப்பேன்?
தூக்கத்தில்..
தனிமையில்..
காதலில்..
நினைவில் இல்லை
யாரேனும் களவாடியிருக்கவும் கூடும்
போகப்போக புரிந்து கொண்டேன்
முகவரியை மட்டுமல்ல
முகத்தைக்கூட நான் தொலைத்திருக்கிறேன்.
எல்லோரிடமும் விசாரித்துப் பார்க்க
எத்தனித்தபோது அதிர்ந்து போனேன்..
என்போலவே எல்லோரும்
அவரவர் தெருக்களில்
அவரவர் முகவரியையும் முகத்தையும்
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்..
இப்போது புரிகிறது
மனிதநேயத்தின் முகவரியை மனிதன்
சுட்டெரித்த தினத்தன்றுதான்
காணாமல் போயிருக்கும்
மனிதம் என்னும் முகவரி...
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- நிந்தவூர் ஷிப்லி
- பிரிவு: கவிதைகள்