எனது தெருவிலேயே
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது முகவரியை...
எப்படித் தொலைத்திருப்பேன்?
தூக்கத்தில்..
தனிமையில்..
காதலில்..
நினைவில் இல்லை
யாரேனும் களவாடியிருக்கவும் கூடும்
போகப்போக புரிந்து கொண்டேன்
முகவரியை மட்டுமல்ல
முகத்தைக்கூட நான் தொலைத்திருக்கிறேன்.
எல்லோரிடமும் விசாரித்துப் பார்க்க
எத்தனித்தபோது அதிர்ந்து போனேன்..
என்போலவே எல்லோரும்
அவரவர் தெருக்களில்
அவரவர் முகவரியையும் முகத்தையும்
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்..
இப்போது புரிகிறது
மனிதநேயத்தின் முகவரியை மனிதன்
சுட்டெரித்த தினத்தன்றுதான்
காணாமல் போயிருக்கும்
மனிதம் என்னும் முகவரி...
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை
தொடர்புடைய படைப்புகள்
தொலைந்த என் முகவரி
- விவரங்கள்
- நிந்தவூர் ஷிப்லி
- பிரிவு: கவிதைகள்
More articles by நிந்தவூர் ஷிப்லி
- இது வேட்டையர்கள் காலம் (05 பிப் 2018)
- உதிர்ந்த இலைகள் எழுதும் ஒரு காதல் பாடல் (20 ஜூலை 2017)
- அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள் (24 ஏப் 2010)
- தொலைதூர அழுகுரல் (24 ஏப் 2010)
- அர்த்தமில்லாத அவஸ்தைகள் (23 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.