எனது நிழலாய் வருகிற உன் மேல்
நான் கொள்ளும் வெறுப்பையும்
அதையும் மீறிய உன் நேசமும்
இணையும் நேர்கோடுகளில்
உயிர்த்திருக்கிறது நம் நட்பு
...
வாளெடுத்து சொற்களாய் வீசும்போதெல்லாம்
லேசாய் சிரித்து அதிர வைக்கிறவன் நீ
...
நானோ வெறும்காற்றில் கைகளை வீசி
என்னையே வீழ்த்திக்கொள்கிறேன்
..
உன்னைப் புதைத்துவிட்டு உனதன்பை மட்டும்
பெறமுடியுமென குழி வெட்டி காத்திருக்கிறேன்
...
மஞ்சள் பூக்கள் உதிர்ந்த சாலையில்
கண்கள் பனிக்க விடைபெற்றாய்
..
இன்னும் அலைகிறேன் நல்லதொரு நட்பிற்க்காக
..
- சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- சரவணன்.பெ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post