எனது நிழலாய் வருகிற உன் மேல்
நான் கொள்ளும் வெறுப்பையும்
அதையும் மீறிய உன் நேசமும்
இணையும் நேர்கோடுகளில்
உயிர்த்திருக்கிறது நம் நட்பு
...
வாளெடுத்து சொற்களாய் வீசும்போதெல்லாம்
லேசாய் சிரித்து அதிர வைக்கிறவன் நீ
...
நானோ வெறும்காற்றில் கைகளை வீசி
என்னையே வீழ்த்திக்கொள்கிறேன்
..
உன்னைப் புதைத்துவிட்டு உனதன்பை மட்டும்
பெறமுடியுமென குழி வெட்டி காத்திருக்கிறேன்
...
மஞ்சள் பூக்கள் உதிர்ந்த சாலையில்
கண்கள் பனிக்க விடைபெற்றாய்
..
இன்னும் அலைகிறேன் நல்லதொரு நட்பிற்க்காக
..
- சரவணன்.பெ (
நட்புக்காலம்
More articles by சரவணன்.பெ
- செம்புலப்பெயல்நீர் (13 ஏப் 2010)
- சிகரங்களைத் தொடுவோம் (13 ஏப் 2010)
- கடைசியாய் சில வார்த்தைகள்... (13 ஏப் 2010)
- ஆதியில் காமம் இருந்தது (04 மார் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.