தனிமையின் விளிம்பில்
ஏகாந்தம் வாசித்திருந்த சமயம்
dreamபேச்சுத்துணை வேண்டி அவள் வந்தாள்
விரல்நுனிகளுரசி
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கவிட்டவளும்
கூந்தல் அவிழ்த்து காலத்தைப் புரளவிட்டவளும்
தானேயென்றவளை
ஏனோ எனக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை
பலவான தேவதைக்கதைகள் பேசிக்களித்து
இசைப்பாடலுடன் கண்ணயர்ந்தபின்
நடந்தவையெல்லாம் கனவாகவே இருந்த பட்சத்தில்
கண்விழித்துப் பார்க்கிறேன்
எதிர்த்துருவத்தில் யாரோ ஒருவனுடன்
அளவளாகிக் கொண்டிருக்கிறாள்
கையிருக்கும் கனவின் மிச்சங்களை
நிழலைச் சுமந்து சூழும் உருவங்களில்
பொருத்தவியலா இந்நாளில்
என்னில் ஏகாந்தமும் இல்லை
கவிதைகளும் இல்லை..!

கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.