இம்மழை நாட்களில்
உன்னிடம் பேசுவதற்கென்று
ஏதுமிருப்பதில்லை
எங்கு சென்றாலும்
பின்தொடர்கின்றன
ஈடுசெய்ய முடியாத சில இழப்புகள்
எதையோ நினைவுறுத்தியவாறு
அவற்றை தவிர்த்து
இயல்பாக இருக்க முனைகின்றேன்
பழைய நினைவுகளில் புதைந்து
மெதுவாய் நடக்கையில்
முற்றத்துத் தூணில்
சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில்
அசைவற்றக் குளத்தில்
தனியேக் கல்லெறிகையில்
நின்று போன மழையை வெறிக்கையில்
மங்கிய மாலையில்
மொட்டை மாடியில் தேனிர் அருந்துகையில்
என எக்கணத்திலும்
வெறுமையை நிறைக்கக்கூடும் இக்காலம்
எனினும் அடுத்து நடப்பவைகளுக்கு
எவர்க்கும் நிட்சயங்களில்லையென
நீட்டுகின்றேன் இப்பொழுதை.
இங்கு
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட
- குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)