அடர்ந்து பொழிகின்றது
சில தினங்களாய்
பருவம் தப்பிய இம்மழை
வலுவான காற்றுடன்
வரும் அதன் நோக்கம் அறியயியலாதது
வரவேற்க விரும்பாதது
மழையாலும் காற்றாலும்
பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைகள்
ஒடிந்துவிழாமல் இருக்க
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றேன்
இலைகளற்று
நிர்வாணமாக்கபட்ட பிறகு
கவலை கொள்ள ஒன்றுமில்லைதான் எனினும்
மனதை கணக்கச்செய்கின்றன
தொடர் போராட்டத்திற்கிடையே
கரைந்து வழியும் மழையுடனான
எனது பழைய நெருக்கங்கள்
ஏனிந்த மாற்றமென வியப்பளிக்கையில்
மேலும் அதி தீவிரமாகி
எனை முற்றும் சாய்க்க முயல்கின்றது
அதன் கோர முகங்காட்டி
என் சுயங்கள் வழியே
எனது கிளைகளை விரியச் செய்கின்றேன் இவ்வெளியெங்கும்
வேர்களை பரவச் செய்கின்றேன் மிக ஆழமாக
இப்பொழுது
சமாளிக்கக் கற்றுகொண்டிருக்கின்றேன்
இம்மழையை
அரவணைப்பதாயினும்
அடித்து வீழ்த்துவதாயினும்
- குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்