இரவைப் போர்த்தி
நடந்தவைகளை
எப்படிக் கேட்டும்
சொல்லவில்லை
பகலிடம்
ஒளிந்த இரவு.

***

விடுதலையை விரும்பாத அன்றாடம்

ஒழுங்கின் பாசாங்கில்
வீழ்ந்துவிடும்
விட்டில்கள்
மினுக்க மறுக்கிறது
தாழாத் துயரமாக.

***

பிரகடனம்

என்னை ஒப்புக்கொடுத்தபின்
உனக்கானதாக மாற்றிடாத
கால விரயம்
எனக்குத்தான்
துயரமென்பதை
எப்பொழுது
அறியப் போகிறாய்
என் கைவயப்படாத
சுவாசத்திற்கிடையில்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.