யாவும்
உறங்கிக் கிடக்கும்
நடுநிசியில்
கொட்டும் மழைக்கு
அநேக காரணங்கள்
இருக்கலாம் பெய்வதற்கு.
நனைதலின் பொருட்டான
விழிப்பில்
மாடியில் குளிப்பதை
எவரும் பார்க்காது
போர்த்திய இரவை
மின்னல்தான்
எட்டிப் பார்த்தது
வெட்கமுற வைக்குமாறு
குளித்தலைப் பார்க்கும்
கொடூரத்தை சத்தமற்று.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.