நெடும்பனை நான்
நெல்வயல் நீ
உன்னைத் தழுவி
வரும் பாடலை
பனையோலை பச்சையாய்
இசைக்கும் போது
உன் வாய்க்காலில் கெழுத்தியாகும்
என் மனம்.
செங்கால் நாரையொன்று
என் சொல்லைக் கவ்வி
தன் பெடைக்கு
இரையாக்கும் வேளை
மருதத்தின் கூடுகளில்
நம் காதலின் கவிச்சி வாடை

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.