காற்றைக் கீறி 
இசை பிளியும்
 
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
 
பயணப்படுபவளின்
 
துப்பட்டா வாசமுகர்ந்து
 
பின்தொடரும் அவ்வொருவன்

இம்மழை இரவில்
 
அழகிய பாடலொன்றை
 
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்

அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!  

 
-
ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It