விலாசம் இல்லாமல்
நீ எழுதிய
கடிதத்தில்

மழைத்துளி சிந்திய போதுதான்
முடிந்திருக்க வேண்டும்
என் வாழ்க்கை!

விழுந்து விரிந்த
துளியின்
வலப்புற முடிவில்
"
எப்படியாவது வந்து கூட்டிப் போ"

எங்கென்று குழம்பிய
நாட்களை
நினைவு படுத்திக்கொண்டே
முகம் சுளிக்கிறேன் -

ஒளிந்து விளையாட
கூப்பிடும் மகனிடம்.


-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It