வேலையில்லா திண்டாட்டம்;
மாதத்தவணை கட்ட இயலா தவிப்பு;
திறக்காத பள்ளிக்கு கட்டணம்;
வங்கி அதிகாரிகளின் அர்ச்சனை;
திமிங்கலகுட்டி போடும் மீட்டர் வட்டி;
புரிந்து கொள்ளாத இரத்த உறவுகள் ;
விலகி போன சொந்தங்கள்;
கை கொடுக்காத நட்பு;
அதிகரித்த அழுத்தங்கள்;
தண்டுவடத்தை நொறுக்கிய பாரங்கள்;
இவைகள் எதுவுமே
இறப்பிற்கான காரணமாகக்
குறிப்பிடப்படவில்லை....
தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டவனின்
பிரேத அறிக்கையில்!

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.