காற்று இல்லாமல் இறக்கும் மனிதன்
காற்று இல்லாமல் எரிவது இல்லை
ஒற்றை சிறகில் பறக்கும் பட்டாம்பூச்சி
எரிந்த பின்பு காற்றில் பறக்குது சாம்பலாய்.
ஒற்றை காலை ஊன்றி நடந்தோம்
கட்டை கொம்பும் கையில் இல்லை
மயக்கம் வந்தது என மெல்லப் படுத்தோம்
எழுந்து பார்க்கையில் எரியூட்டப் பட்டோம்
வாக்காளர் பெட்டி போல
பிணங்கள் கிடந்தன ஓரமாய்
எனக்கு இறக்க விருப்பமில்லை..
எனது அரசு விரும்பினால்
எரியும் குழியில் இறங்கச்சொல்லும் என்னை…
பிணங்களுடன் காத்து இருந்தவர்களும்
சேர்ந்து எரிக்கப்பட்டார்கள்
செந்தாமரை தழலில்…
வரலாற்றில் மறைக்க
பள்ளங்கள் எடுக்கவில்லை
சாம்பல் நிறைந்தது
சடங்குகள் நடக்கவில்லை
மரங்களை வெட்டியதால்
விரகும் நனைய வில்லை…
நாங்கள் வேந்து விட்டோம்
எங்களில் எதுவுமில்லை
இது தான் எங்கள்
இந்தீயா…
- மு.தனஞ்செழியன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- விவரங்கள்
- மு.தனஞ்செழியன்
- பிரிவு: கவிதைகள்
என்று தனியும் இந்த நெருப்பு,. யார் இதற்கு பொறுப்பு..
உன் கவிதைகளை காலத்தின் கையில் தந்து விட்டாய் காலம் பதில் சொல்லட்டும் காத்திருப்போம். ..
கவிதை வரிகள் கனக்கிறது கனலாய் .
RSS feed for comments to this post