பெண் - 1
நகைப்புடைவைக் கடைகளில்
பெண்கள் என்ற வரிகளோடு
தொடங்கிய கவிதையை
தொடராமலே வைத்திருக்கிறேன்
இன்னமும்.
0
பெண் - 2
இயற்கை கூந்தல் மணம் என்ற
வரிகளுக்கான கவிதையும்
இன்னமும் அப்படியே
இருக்கிறது கிடப்பில்.
0
பெண் - 3
குளிர்மழை நாளொன்றின்
குவாலிஸ் பயணத்தில்
மனைவியின் தோளில்
உறங்கியபடி இருந்த
மகனின் தலைக்குமேல்
சாலையில்
பேருந்து நிறுத்தமொன்றில்
கணநேரம் காட்சி தந்து
மறைந்த முகம்
கண்டிப்பாய்
அவளுடையதில்லை.
- செல்வராஜ் ஜெகதீசன் (
பெண் கவிதைகள் மூன்று
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.