சாரங்கபாணியும் சதாசிவனும் இறங்குவதற்கு முன்னரே
சேறும் சகதியும் மண்டிய
இந்தக் குளத்தில்
இறங்கித் தூர்வாரியது
எங்கள் வீதி
மூக்கனும் அம்மாசியும்தான்
முதலில் குளத்தில் விழுந்தது
அவர்களின் வியர்வைத் துளிதானடி
குதம்பாய்...
அவர்களின் வியர்வைத் துளிதானடி குதம்பாய்...

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.