இமைக்க மறந்த தருணத்தை
வெயிலாக்கி உரைத்ததில் குளிரானது
நாம் விழுங்கிய சொல்

ஒரே பார்வைக்குள் நான்கு விழிகள்
பதறி எடுத்த கண்களில்
காட்சி மாற்றிக் கொண்டோம்

நீ சொல் என நானும்
நானே சொல் என நீயும்
எதிர்முனை வினைகளோடு
அவரவர் எல்லைகள் காத்தோம்

ஒரு முறை பற்றிப் பிரிந்த
காலம் உறைந்து கிடந்தது
இடம் மாற்றியது நாமே தாம்

அவரவர் அறைக்குள் சென்ற பின்னும்
திறந்து கொண்டேயிருந்தன ஜன்னல்கள்
அடைக்க மறந்த கைகளில் ஆளுக்கொரு நாம்....!

- கவிஜி

Pin It