வளைந்தோடும் அழகில்
தூரத்தின் மிதப்பு
அரூப நிழல்
வயிறு முட்ட நிறைந்திருக்கிறது
விழும் இலையெல்லாம்
விருதுகள்
தொடும் மரத்துக்கெல்லாம்
விருந்தோம்பல்
ஓடிக்கொண்டே இருக்கும்
தத்துவ துளிகளின் திரட்டு
பூக்கள் கொண்டு வரும்
காற்றோடு இயைந்த கனிவு
சில பாதங்களின் நினைவுச்சூடல்
கொலுசொலிகூட
சிலபோது கொலுசும் கூட
அமர்ந்த பொழுதில்
காலாட்டும்
நின்ற பொழுதில் தாலாட்டும்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நதியை
நிகழ விடுகிறேன்
சாட்சியாய் நின்று காணும்
ஒரு நாணலின் திசை
சடவெடுக்கிறது
- கவிஜி