ஆச மக
பெத்து பிழைச்ச
நேரத்தில
ஒத்தாசைக்கு
வந்த கிழவி...
கொள்ளை அழகு
பேரப்பிள்ளை
பொக்கிஷமா
பார்த்துகிட்டா ..
மணிக்கணக்கா
மடிக்கணினி
முறைச்சு கிடக்கும்
மருமவனோ
செல்போனில்
சிரிச்சுப் பேசுற
சிறுக்கி மவளோ
ஆசையா
நாலு வார்த்தை
பேசிப்பார்க்க
காத்துக் கிடந்த
மவராசி
ஆறு மாச
கணக்கு முடிஞ்சு
ஏரோபிளான்
ஏறும்வரை
ஆறுதலா
அணைச்சுக்க
ஆளில்லை ..
ஆயா வேலைக்கு
கூலி போல
பெட்டியிலே
கசந்து கிடக்கு
அயல்நாட்டு
சாக்லேட்டு ....
தொடர்புடைய படைப்புகள்
தாய்க்கிழவி
- விவரங்கள்
- அருணா சுப்ரமணியன்
- பிரிவு: கவிதைகள்
More articles by அருணா சுப்ரமணியன்
- மீள்பதிவு (04 ஏப் 2020)
- மௌனங்களின் காலத்தில்! (11 மார் 2020)
- கதவு (03 அக் 2019)
- நாட்களின் துண்டுகள் (27 செப் 2019)
- கதவுகளும் சாவிகளும்... (12 ஆக 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.