காத்திருக்கும் பொழுதுகளில்
கதவுகள் திறப்பதில்லை...
கதவுகள் திறக்கும் பொழுதுகளில்
வாயிலில் யாருமில்லை ..
மூடிய கதவுகளின்
முன்னிற்கும் தருணங்களில்
வேறெங்கோ கதவுகள்
திறந்து மூடப்படுகின்றன...
மூடிய கதவுகளையே
தட்டிக் கொண்டிருப்போர்க்கு
திறக்கப்பட்ட கதவுகள்
தென்படுவதில்லை..
தட்டப்படும் கதவுகள்
எல்லோருக்கும் திறப்பதில்லை....
திறக்கப்படா கதவுகள்
எல்லோருக்கும் இடறலில்லை...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.