இதிகாசம் ஒன்றும்
இயற்றிடவில்லை
நீயும் நானும்..
சின்னச் சின்ன
ஹைக்கூக்களால் தான்
சிறகுகள் விரித்தோம்
நம் பால காண்டத்தில் ...

காலதேவன் கருணையில்
வெவ்வேறு திசையில்
புலம்பெயர்ந்த
இவ்வாரண்ய காண்டத்திலும்
ஆதுரமாய் இருப்பது
என்னவோ
அவற்றின்
மீள்பதிவுகள் தான் ...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.