ஒரு மரம்
முறிவதைப் போலல்ல
மனம் முறிவதென்பது

அதற்கென
துளித்துளியாய்
வெறுப்பை
விதைக்க வேண்டும்!

துளித்துளியாய்
ப்ரியத்தில்
கசப்பேற்ற வேண்டும்!

துளித்துளியாய்
வன்மம்
வளர்க்கவேண்டும்!

இதுவெதுவுமில்லாமல்
மனம் முறிப்பதென்பது
எளிதல்ல!
மரம் முறிப்பதைப் போல...

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.