தார்ப்பாய் ஓட்டைவழி
வழியும் பூத்தூறல்
குளியலில் சிரிக்கிறான்
நடைபாதை சிறுவன்...
தாயின் கதகதப்பில்
நடுக்கத்தை
குறைக்கிறது
குடைக்குள் குழந்தை..
தனக்கு மிகவும் பிடித்த
பர்ப்பிள் கவுனை
பாழாக்கியதாய்
பழி சொல்கிறாள்
பார்ட்டிக்கு வந்த சிறுமி..
மழை எல்லோருக்கும்
பெய்யென பெய்கிறது...

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.