எனது சாபங்களை
கரையேற்ற
எனது கண்ணீரை
பிழிந்தெறிய
எனது வன்மத்தை
பனிக்கட்டி கொண்டு கரைக்க
தண்ணீர்த் தொட்டியில்
மூச்சுவிட்டு
முகம் புதைக்கும்
ஒரு நீர்க்குமிழாக
அறுந்து விழுந்தும்
என் கனவுகளை பலிபீடத்தில்
தெளிக்க
இந்தப் பெரும் சாலையை
தெரிவு செய்துள்ளேன்
எதேச்சையாக இல்லாமல்
நம்பிக்கையோடு
இந்த சாலை கடக்குமுன்
ஒரு நண்பன்
என்னை சந்திக்கக்கூடும்
என்ற முற்பதிவுடன்...

- ஜெ.ஈழநிலவன்

More articles by ஜெ.ஈழநிலவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.