அவ்வப்போது
என்னை ஆண் என்னும்
முகமூடியால் மூடிக்கொள்!

என் காலத்திற்கு
நீ யிட்ட பெயரில்
இன்னும் மாற்றமில்லை
உன் பெயரில்
பல உருவங்கள்
முகிழ்ந்து கொண்டிருக்கு!

சில வேளை
வெறித்தனம் பிடிக்கும்
என் சன்னலுக்கு
நகரமுடியாத
அதன் ஆணிகள்
சாபக்கோடு கிழித்திருக்கும்
அதனால்
காற்றை கடன்வாங்கி
கைதட்டி அழுகிறேன்
பட பட என்று!

கடலில் வீழும்
மழைத்துளியை
கண்டுகொள்ளாத அலைகள்
ஒவ்வொரு வீட்டின்
தலைகளாய்!

உனது வருகைக்கு
முன்
உதிரும் ஒவ்வொரு
சொட்டு கண்ணீரும்
எனது மார்புக்குள்
மறைகிறது!

நிழலை விழுங்கும்
வெயிலென
உன் பெயரால்
உருகும் என்
மெழுகுவர்த்தி...

- ஜெ.ஈழநிலவன்

More articles by ஜெ.ஈழநிலவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.