platform peopleபென்சிலை கூராய் சீவி 
குத்தும் போது 
உணரும் வலி 
மரங்களினுடையது! 
____________________


சித்திரை, மார்கழி 
வேறல்ல ஒன்று தான் 
நடைபாதையில் உறங்குபவனுக்கு! 
________________________


காலங்களை கலைத்து 
விளையாடிய பிள்ளைகளால் 
மணிக்கூண்டில் ஏற்றப்படுகின்றன 
மணிகள்! 
_______________


காற்றின் கொடையான 
புல்லாங்குழல் 
சில்லிட்டுச் சிலிர்த்தது 
பார்வையற்றவர் 
ஊதும் போது! 

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It