rainbow 600

அம்மாம் பெரிய
மரத்தடியில்
கொஞ்சூண்டு இடம்
இல்லாமல் நகர்ந்து
கொண்டேயிருக்கிறது
வெயில்....
-------

கழுவி விழுந்த
நீர்த் துளிகளில்
உடைந்து கொட்டியது
முகம்...
-----

கிளை உடைய
தாவிய சிறகில்
இரண்டு இலைகளும்
ஒட்டிக் கொண்டன...
---

நிறங்களை அள்ளிப் போகும்
கரங்களின் நீட்சி
வானவில்....
--------

- கவிஜி

Pin It