வேலை யின்மையோ விலைவாசி உயர்வோ

சோலைக் குறைவால் புவிவெப்ப உயர்வோ

எவ்வழி யாவர் பிழையாய்ச் செலினும்

செவ்வழி செல்லா வினைஞர் பொறுப்பே

(வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, (முதலாளித்துவ முறைப்படி நஷ்டம் ஏற்படும் காரணத்தினால்) போதிய மரங்கள் வளர்க்கத் தவறுவதால் விளையும் புவி வெப்ப உயர்வு முதலிய பிரச்சினைகள் யார் யாரோ செல்லும் தவறான வழிகளால் ஏற்படுவதாக இருந்தாலும், (தங்கள் சுதந்திரத்திற்காக) சரியான வழியான சோஷலிச வழியைத் தேர்ந்தெடுக்காத தொழிலாளர்கள் தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பாவார்கள்.)

Pin It