yellowmanமதுவுக்கு பிந்தைய
என் கவிதைகளில்
ஒற்றைப் பனை மரம்
கடந்து
மஞ்சளுடையில்
சைக்கிளில் பயணிக்கும்
உனக்கு வயதாகவேயில்லை
என்பதுதான்
ஒவ்வொரு கவிதையின்
முடிவாகவும் இருக்கிறது....

திருப்பங்களில்லாத
பாதையாகிய புள்ளியாகி
நிற்கும் கால வர்ணங்களின்
தொலைவில்
தொலையவேயில்லை
எனக்கான உன் மஞ்சள் நிறம்...

- கவிஜி

Pin It