வீட்டுக்குள் நுழையும்போது
வெளியில் செல்லும்போது
தெருமுனை டீக்கடையில்
மளிகைக்கடை அண்ணாச்சிக்காக
அலுவலகம் நுழைகையில் வாட்ச்மேனுக்காக
உள்நுழைந்து மேனஜருக்கு வணக்கம் வைக்கையில்
பக்கத்து இருக்கை ரவிக்காக
எதிர் இருக்கை பத்மாவுக்காக
இப்படி நாள் ஒன்றுக்கு
யாரும் பார்த்துவிடாதபடி
முப்பதுக்கும் குறையாத
முகமூடிகளை கழட்டி மாட்டிக்கொள்கிறான்.
ஆனாலும் ஒருநாள் இரவு
முகமூடிகளை கழட்டி மாட்டும் இடைவெளியில்
அவன் நிஜமுகத்தை கண்டுகொண்ட
தெருநாய் ஒன்று
விடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது
விடியும் வரை!
- எம்.ஸ்டாலின் சரவணன்
RSS feed for comments to this post