சுதந்தரத்தைக்
கொடுத்த போது
என் பாட்டன்
தூங்கிக் கொண்டிருந்தது
தப்பாகப் போச்சு
இப்ப கொடுக்கவேண்டாமென்று
இன்னொரு பாட்டன்
அப்பவே சொன்னான்
யாரும் கேட்கவில்லை
வேட்டுச் சத்தம் கேட்டு
விழித்த
பாட்டன்களுக்கு
அப்போது தெரியவில்லை
வேட்டு
வாழ்க்கைக்கு வைத்ததென்று

Pin It