prayer 340நீ பிரார்த்தனை செய்கிறாய்
உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.
இது இப்படி நிகழ வேண்டுமென
விரும்புபவன் அவன்
தீர்மானிப்பவன் அவன்
எழுதியிருப்பவன் அவன் என்று
தெரிந்திருந்தும்
நீ பிரார்த்தனை செய்கிறாய்
உன் கடவுளின் விருப்பத்துக்கு எதிராக.
பிரார்த்தனைகள்
நடக்கும் இடங்களில்
அவன் எழுப்பிய
புயல்கள் ஓய்வதில்லை
வெள்ளம் வடிவதில்லை
பூகம்ப அதிர்வுகள் குறைவதில்லை
நீ
உன் கடவுளுக்கு
நன்றி சொல்லவேண்டும்.
அவன் எப்போதாவதுதான்
சுனாமியை விரும்புகிறான்.

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It