ஆடிக்காற்றில்
இனி
மிக்ஸிதான் பறக்கும்.
__________________
வெளியாகும் இந்திரியத்தோடு
முடிந்து போகிறது
காதலும் காமமும்.
__________________
செரிக்கவியலாத வீட்டுப்பாடங்களே
நிறைய குழந்தைகளின்
வயிற்று வலிக்குக் காரணமாகின்றன.
___________________
கதவை மூடியதும்
தைரியம்
திறந்துகொள்கிறது.
______________________
ஆந்தைகளைப் போல
காமத்திற்கும்
இரவில்தான் கண் தெரிகின்றன.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
கண்கள் தெரிகின்றன....
(தினத்தந்தி தமிழ் கவிதை வரைக்கும் வந்துவிட்டது!.. . என்ன செய்வது?)
RSS feed for comments to this post