கவலை
_____
நமக்குப் பிடிக்குமா
என்பதை விட
பிறருக்குப் பிடிக்குமா என்பதுதான்
நமது பெரிய கவலை.

சோட்டா பீம்
_______________
சோட்டாபீமின் சாதனைகளில்
மகத்தானது
குழந்தைகளுக்கு சோறூட்டுவது.

ஆத்திரம்

அப்பாவின் அதட்டுதலிற்காய்
புத்தகம் திறக்கையில்
மரங்களை நட்ட
அசோகர் மீதெல்லாம்
கோபம் வருகிறது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.