வேகம் கூடும்ல மாமா என்றவாறே
சப்பல்களிரண்டையும்
கையடக்கப்படுத்துகிறாள்..
வழிநெடுகும் பட்டாம்பூச்சிகளுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பிருக்குமோ
இருக்காதோ யென்பதே என்சந்தேகம்..!

ஆச்சர்யகுறிகளின் மிரளல்
சஞ்சலப்பட்டதொரு தருணம்
மெதுவாய் புன்னகைத்து நகர்கிறாள்
அழகெனப்படுவது அவளெனவும்
பூதூவுவது நானெனவும்..

- ஆறுமுகம் முருகேசன்

Pin It