நல்லதொரு இடத்தில்
எனை நட்டுவைத்து
வளர்க்கப்போவதாய் பறைசாற்றி
சின்னதாய் பாலித்தீன் கவரில்
மண் நிரப்பி
என் வேர் மட்டும்
புதையுமாறு
பார்த்துக் கொண்டாய்.
தினமும் சில நிமிடங்கள்
வெய்யிலில் காட்டுகிறாய்.
உன் அலுவல் பரபரப்பில்
களவு போய்விடுவேனோவென்று
கதவுகளுக்குள்
இடம்பெயர்க்கத் தவறுவதில்லை.
என்னை வாங்கிவருகையில்
ஸ்கூட்டரில்
உனது கால்களுக்கிடையில்
கெட்டியாகப் பற்றிவந்த போது
உன்வீட்டில் வளர்வதையே
விரும்பினேன்.
ஆனால்
ஒரு குழந்தையை
அன்பு செய்யத்
தெரியாதவன் வீட்டில்
எந்த மரமும் தழைப்பதில்லை
என்கிற விதியை மெய்ப்பிப்பதற்காகக்
கருகி மடிகிறேன் நான்.
பேசும் பணச்செடி
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
- மகா கவனத்தின் விளைதல் பிழை (17 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.