அணிகையிலும் களைகையிலும்
வெவ்வேறழகு நீ.
மழை மாதிரி.

கொஞ்சிக்கொண்டே
இருக்கவேண்டும் என்கிறாய்.
தூறிக்கொண்டே இருக்கும் மழை.

அடைமழைக்கு
ஒளிவதுபோலத்தான்.
உன் கோபப் பொழிதல்களிலும்

சாத்தியமேயில்லை
என்று நினைக்கையிலெல்லாம்
உன்வருகை போன்றே மழை.

உன் என் ஊடல்
எப்படி அறிந்திருக்கும் மழை.
உன் மேல்தான் சந்தேகம்.

எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.
பருவகால மழையாய்.
ஊடல் கோடை மழை.

மழைகளில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
முதல் மழையில் தொலைந்த என்னை.

மழைநீர் சேகரிப்பு தொட்டி
வீட்டிற்கு வெளியேயும்
மனசுக்குள்ளேயும்.

நன்றி:ஆனந்த விகடன் (சொல்வனம்) 11.05.2011

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.